புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2015

புலிகளுக்கு மஹிந்த பணம் கொடுத்த விவகாரம்: எமில்காந்தனை இலங்கை அழைத்துவர முயற்சி


விடுதலைப் புலிகள் அமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பணம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்திடம் இருந்து விடுதலைப் புலிகள் சார்பாக எமில்காந்தன் அவர்களே பணத்தை பெற்று விடுதலைப் புலிகளின் தலைமையிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனடிப்படையில் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக எமில்காந்தனை இம்மாத இறுதிக்குள் இலங்கை அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எமில்காந்தன் வருகை தரும் இடத்தில் பணப் பரிமாற்றம் குறித்த பல தகவல்கள் அம்பலமாகும் என தெரியவருகிறது.

ad

ad