புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2015

சென்னையில் குளியல் அறையில் கேமிரா பொருத்தி பெண்களின் குளியல் காட்சிகளை ரசித்து பார்த்தவர் கைது

சிட்லபாக்கம் சண்முகா நகரைச் சேர்ந்தவர் தியாக ராஜன் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. தனியார்
கம்பெனி யில் வேலை பார்த்து வரு கிறார்.கீழ் வீட்டில் வசித்து வரும் அவர் மாடி வீட்டை 4 இளம்பெண்களுக்கு வாட கைக்கு விட்டு இருந்தார். அவர்கள் வெவ்வேறு நிறு வனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இளம்பெண்கள் தங்கி இருந்த வீட்டின் குளியல் அறையில் துணிகளை தொங்க விட இரும்பு கம்பி இல்லை. அதனை அடித்து தரும்படி அவர்கள் தியாகராஜனிடம் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரும்பு கம்பி அடிக்கப்பட்டது.

இந்த நிலையில் குளியல் அறைக்கு இளம்பெண் ஒருவர் சென்றபோது அதில் ரகசிய காமிரா பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது குளியல் அறையில் பொருத்தப் பட்டிருந்த காமிரா மூலம் கீழ் வீட்டில் இருந்தபடி தியாக ராஜன், லேப்-டாப்பில் பெண்களின் குளியல் காட்சிகளை ரசித்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து தியாகராஜனை போலீசார் கைது செய்தனர். ரகசிய காமிரா, லேப்-டாப் பறிமுதல் செய் யப்பட்டது.

ad

ad