புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2015

நல்லூர் சங்கிலியன் அரண்மனைக்குள் யாசகரின் சடலம் மீட்பு


யாழ்.நல்லூர் சங்கிலியன் அரண்மனைக்குள் இருந்து இன்று மாலை யாசகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக யாசகம் பெற்றுவரும் யாசகர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த சங்கிலியன் அரண்மனை கட்டிடம் பயன்படுத்தப்படாமலிருக்கும் நிலையில் குறித்த வயதான யாசகர் அந்தப் பகுதிக்குள் சென்று உயிரிழந்திருக்கலாம் என நம்பபடுகின்றது. எனினும் யாசகர் உயிரிழந்த சம்பவம் வெளியே யாருக்கும் தெரியாத நிலையில், சடலம் துர்நாற்றம் வீசியதன் பின்னதாகவே சடலத்தை கண்டுள்ளதுடன், கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

ad

ad