சர்வதேச கால்பந்து சபையின் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சுவிஸ் வங்கிக் கணக்குகளில் சர்வதேச
கால்பந்து சபையில் இடம்பெற்ற ஊழல் பணம் நகர்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாகவும் இதன் காரணமாக குறித்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காற்பந்து சபையில் கடந்த இருதசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற ஊழல்கள் குறித்த விசாரணைகள் தற்போது முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன. உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் போது ஒளிபரப்பு உரிமம் வழங்குதல், சந்தைப்படுத்தல் உரிமம் வழங்குதல் மற்றும் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான நாடுகள் தெரிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஊழல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நிதி உள்ள வங்கி கணக்குகள் அனைத்து முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.