புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2016

பெப்ரவரி 04ஆம் திகதி விடுதலை வேண்டும்! இல்லையெனில் போராட்டம் தொடரும்

எதிர்வரும் பெப்ரவர் மாதம் 04ஆம் திகதி (இலங்கை சுதந்திர தினம்) தம்மை விடுவிக்காவிடின் போராட்டம் தொடரும் என தமிழ் அரசியல்
கைதிகள் தெரிவித்துள்ளனர்கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (27) முன்னிலைப்படுத்தப்பட்டு, மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே தமிழ் அரசியல் கைதியொருவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதாக அரசாங்கத்தினால் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், கைதிகள் பிணையில் செல்லவே அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், தற்போது அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், தமது விடுதலை குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது அரசாங்கத்திற்கான இறுதி எச்சரிக்கை என்றும் தமிழ் அரசியல் கைதியொருவர் தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ், சிங்கள அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் சுவிசர்லாந்தில் சர்வதேச ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

ad

ad