புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2016

1009 ரன்கள் நாட் அவுட்! மும்பை பள்ளிச் சிறுவனின் உலக சாதனை!


ஒரே இன்னிங்ஸில் 1000 ரன்கள் குவித்த முதல் கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார், மும்பையைச் சேர்ந்த 15 வயது பிரனவ் தனவேத்.

மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான ஹெச்.டி. பண்டாரி கோப்பை உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு ஆட்டத்தில், கே.சி. காந்தி மேல்நிலைப் பள்ளியும் ஆர்யா குருகுல் பள்ளியும் மோதின.
இதில் முதலில் ஆடிய கே.சி. காந்தி பள்ளி அணி ரன்களைக் குவித்தது. பேட்ஸ்மேன் பிரனவ், பவுலர்களைப் பதம் பார்த்தார். தொடர்ந்து ஆடிய அவர் இன்று நம்பமுடியாத விதத்தில் ஆயிரம் ரன்களைக் கடந்தார். இதுவரை கிரிக்கெட்டில் எந்த ஒரு வீரரும் ஒரே இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்தது கிடையாது.
3 விக்கெட் இழப்புக்கு 1465 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது கே.சி. காந்தி அணி. பிரனவ் கடைசி வரை அவுட் ஆகாமல் 323 பந்துகளில் 1009 ரன்கள் குவித்தார். இதில் அவர் 129 பவுண்டர்களும் 59 சிக்ஸர்களும் அடித்தார்.
பிரனவ், 629 ரன்கள் எடுக்கும்போதே அது உலக சாதனையாக ஆனது. கிரிக்கெட்டில் இதுவரை எந்த ஒரு பிரிவிலும் யாரும் இவ்வளவு ரன்கள் எடுத்தது கிடையாது. 1899-ல் காலின்ஸ், 628 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. 117 வருட சாதனையை முறியடித்துள்ளார் பிரனவ். 
10-ம் வகுப்பு படிக்கும் பிரனவ்-வின் தந்தை, ஆட்டோ ஓட்டுநர். பிரனவ் ஆயிரம் ரன்களை இன்று கடந்தபோது அவர் அதை நேரில் கண்டு மகிழ்ந்து போனார்.
பிரனவ்-வின் கல்வி மற்றும் கிரிக்கெட் பயிற்சிக்கான மொத்தச் செலவையும் மஹராஷ்டிர அரசு ஏற்றுக்கொள்வதாக கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்தே அறிவித்துள்ளார்.

ad

ad