புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2016

டெல்லியில் நடந்தது நடிகை அசின் திருமணம் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணந்தார்


நடிகை அசின் திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. தொழில் அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணந்தார்.
பிரபல நடிகைகேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அசின். கடந்த 2004–ஆம் ஆண்டில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன்
நடித்தார். கஜினி, தசாவதாரம், சிவகாசி, வரலாறு, போக்கிரி, காவலன் போன்றவை அசின் நடித்த முக்கிய படங்கள்.
‘கஜினி’ படம் அமீர்கான் நடிக்க இந்தியில் தயாரானபோது அதிலும் கதாநாயகியாக அசின் நடித்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் இந்தி படவாய்ப்புகள் குவிந்தன. சல்மான்கான், அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கான் போன்ற பிரபல இந்தி பட நாயகர்களின் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
தொழில் அதிபருடன் காதல்இந்த நிலையில், அக்ஷய்குமார் ஜோடியாக ‘கிலாடி 786’ படத்தில் நடித்தபோது அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். கடந்த ஒரு மாதமாக இவர்களின் திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்தது.
டெல்லியில் நேற்று அசின்–ராகுல் சர்மா திருமணம் நடந்தது. அசின் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் காலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். அப்போது அசின் வெள்ளை நிறத்தில் கவுன் அணிந்து இருந்தார். திருமணம் முடிந்ததும் 10 அடுக்குகளில் செய்யப்பட்ட கேக்கை இருவரும் வெட்டினார்கள். மாலையில் நட்சத்திர ஓட்டலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
திருமண வரவேற்புஇந்த திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 100 பேருக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்கள் கலந்து கொண்டார்கள். திருமண வரவேற்பு, வருகிற 23–ந் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.
இதில் தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்–நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக அசின் முடிவு செய்து இருந்தார். இதற்காக புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. இனிமேல் அவர் படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது

ad

ad