நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: வைகோ பதில்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுகவில் நாஞ்சில் சம்பத்தின் பதவி பறிக்கப்பட்டுள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த வைகோ, அவர் என்னை பற்றி புகழ்ந்து பேசிய மட்டுமே என் நினைவில் இருக்கிறது. நாஞ்சில் சம்பத் நீக்கம் அதிமுகவின் உட்கட்சி விவகாரம். இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. வரும் தேர்தலில் அதிமுக தோற்கும் என்றார்.
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா 02.01.2016 சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார். எந்த காரணத்திற்காக விடுவிக்கப்படுகிறார் என காரணம் வெளியிடப்பட்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.