புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2016

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பதன்கோட் விமானப்படை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு




தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளான பதன்கோட் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.

டெல்லியில் இருந்து பதன்கோட் சென்ற பிரதமரை பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிரவாதிகள் ஊடுருவிய பாதை மற்றும் தாக்குதல் நடத்திய இடங்கள் விமானப்படை தளவாடங்கள் வைக்கபட்டிருக்கும் பகுதிகள் போன்றவற்றை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த விதம் குறித்து அதிகாரிகள் விவரித்து கூறினர். 

பிரதமர் மோடி பதன்கோட் வந்திருப்பதையொட்டி விமானப்படை தளத்தில் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பஞ்சாப்பையொட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையோரத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

ad

ad