புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2016

வைகோவின் கைகளை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்தவர் கைது




மதுரை அருகே திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த 2–ந்தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திருமங்கலம் முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

வைகோ பற்றி ராஜேந்திரன் பேசும்போது,  தி.மு.க.வை விமர்சித்து தன்னை உயர்த்தி கொள்ளும் தலைவராக வைகோ இருந்து வருகிறார். பணத்திற்காக விலைபோகக்கூடிய வைகோ தி.மு.க.வை விமர்ச்சிப்பதற்கு தகுதியற்றவர். தொடர்ந்து தி.மு.க.வை வைகோ விமர்சித்தால், அவரது சொந்த ஊரான கலிங்கபட்டிக்கு திருமங்கலம் வழியாக அவர் வரும்போது அவரது கைகளை வெட்டுவோம் என்று மிரட்டல் விடுத்து பேசினார்.

அ.தி.மு.க. அரசையும், பெண்களை பற்றியும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக அ.தி.மு.க. சார்பில் சவுந்தர் என்பவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னராஜ், தமிழக அரசு மீது வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பேசுதல், அரசியல் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பெண்களை அவதூறாக பேசுதல் உட்பட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.   மேலும் தி.மு.க. பிரமுகரின் பொதுக்கூட்ட பேச்சின் வீடியோ ஆதாரங்களை சேகரித்த போலீசார் திருமங்கலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். 

ad

ad