ஆண்டுதோறும் குடியரசுத் தின விழா கொண்டாட்டங்களின்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசைக்கலைஞர் கிரிஜாதேவிக்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் திருபாய் அம்பானிக்கு மரணத்துக்குப் பின் பத்ம விபூஷன் விருது அளிக்கப்படுகிறது.
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கம் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது