கேப்பப்புலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த முன்னாள் போராளியும் மூன்று பிள்ளைகளின் தாயாருமாகிய செல்வக்குமாரி, கடந்த சனிக்கிழமை
உயிரிழந்த நிலையில் அவரது உடல் நேற்று அக்கினியுடன் சங்கமமானது.
ஈழ விடுதலைக்காக ஒரு கண்ணை இழந்த செல்வகுமாரி அதன் பாதிப்பால் மறுகண் பார்வையையும் இழந்தார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இவர் மண்ணெண்ணை ஊற்றி விறகை தீமூட்டியுள்ளார். அதன்போது அவர் உடுத்தியிருந்த சேலையிலும் தீப்பிடித்துள்ளது.
கண்பார்வையற்ற அவர் திடீரென எற்பட்ட தீ விபத்தால் உடனடியாக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார், சிகிச்சை பயனளிக்காது கடந்த சனிக்கிழமை மதியம் உயிரிழந்துள்ளார்.
அவரது பூதவுடல் கடந்த 5ஆம் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு 6ஆம் திகதி சீனிமோட்டை தற்காலிக மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.