நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் வருட நிறைவை முன்னிட்டு யாழ் சமூக சேவகர் எம்.நஸீர் வாழ்த்து பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளார்.
யாழ் கல்லூரி வீதியில் அமைந்துள்ள அவரது தொழில் நிலையத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போன்றோரது புகைப்படத்தை தாங்கிய பதாதைகளை தனது சொந்த செலவில் காட்சிப்படுத்தியுள்ளார்.
இவர் தனது கருத்தில் இவ் நல்லாட்சி மேல் தன்னை போன்று சகல மக்களும் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் நாடு சிறப்பாக அபிவிருத்தி அடையும் என தெரிவித்துள்ளார்.