புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2016

தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் வட மாகாண முதலமைச்சருக்கு ராஜதந்திர அழுத்தம்

தமிழ் மக்கள் பேரவையின் அமைப்பு தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்  ராஜதந்திர அழுத்தத்தை எதிர்நோக்குவதாக கொழும்பு
ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பை தளமாகக்கொண்ட மேற்கத்தைய நாடுகள் உட்பட வெளிநாடுகளும் விக்னேஸ்வரனின் முனைப்பு தொடர்பில் அதிருப்திக் கொண்டுள்ளன.
விக்னேஸ்வரனின் அமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடு குறித்தும் அந்த நாடுகள் தமது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளன.
இந்த நிலையில் எதிர்காலத்தில் விக்னேஸ்வரனை சந்திக்கவும் பல நாடுகளின் ராஜதந்திரிகள் முனைவதாக ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இந்த வாரத்தில் இலங்கைக்கு வரும் பிரித்தானிய வெளியுறவு ராஜாங்க அமைச்சர் ஹூகோ ஸ்வைரி  விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ள நிலையில் சுவிட்சர்லாந்தின் பிரதிநிதிகளும் வடமாகாண முதலமைச்சரை  சந்திக்க எதிர்ப்பார்த்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை பொறுத்தவரை புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகளில் ஓரளவு திருப்தியை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகர்வையும் அந்த அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
இந்த நிலையில் விக்னேஸ்வரனின் நகர்வை அந்த அரசாங்கங்கள் விரும்பவில்லை என்று ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad