கவிபேரரசு வைரமுத்து அவர்கள் எதிர்வரும் 23 ம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர்
பெருவிழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருந்தினராக வருகை தருகிறார்.
எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மு/வித்தியானந்தா கல்லூரியில் , விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மாகாண முதலமைச்சர் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிகழ்வில் கவிபேரரசும் கலந்துகொள்கிறார். தாயகத்தின் மீது அதீதபற்றுள்ள கவிபேரரசுவின் வருகையினால் பெருமளவு ரசிகர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.