அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா 02.01.2016 சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த நாஞ்சில் சம்பத், கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்சி சார்பில் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்து வந்த இவர், தனியார் தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
அந்த வகையில் சனிக்கிழமை
தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியின்போது, வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, சாவு வீட்டுக்காக கல்யாணங்கள் நடக்காமலா இருக்கிறது என்று பதில் சொன்னார்.
தந்தி
வெள்ளத்தில் உயிரிழந்த 500 பேரை ஏன் கண்டுகொள்ளவில்லை, அதிமுக பொதுக்குழுவில் அதுதொடர்பாக ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை? என்ற கேள்விக்கு, தேவையில்லை, நிறைவேற்றவில்லை என்று நாஞ்சில் சம்பத் பதிலளித்த காட்சி ஒளிபரப்பானது. இதுவே பதவி பறிப்புக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகின்றன.