புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2016

போர்க்களத்தில் ஒரு பூ” படத்துக்கு தடை கோரி இசைப்பிரியாவின் தாயார், சகோதரி வழக்கு


இலங்கை போரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் தாயார் டி.வேதரஞ்சனி, மூத்த சகோதரி தர்மினி வாகிசன் ஆகியோர் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த ஷோபா என்ற இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
இந்த கொடூர சம்பவத்தை மையமாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் கே.கணேசன் என்பவர் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை ஏ.சி.குருநாத் செல்லசாமி என்பவர் தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் கொடூரமாக கற்பழிப்பு உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த படத்தை பொதுமக்களுக்கு திரையிட்டு காட்ட அனுமதிக்க முடியாது என்று சென்சார் போர்டு கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மேல்முறையீட்டு மனுவையும் சென்சார் போர்ட்டு மேல்முறையீட்டு குழு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், இலங்கை போரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் தாயார் டி.வேதரஞ்சனி, மூத்த சகோதரி தர்மினி வாகிசன் ஆகியோர் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த வழக்கு மனுவில் தர்மினி வாகிசன், ‘’நானும் என் தாயார் வேதரஞ்சனியும், 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது, இங்கிலாந்து நாட்டிற்கு வந்து விட்டோம். நான் என் 3 குழந்தைகளுடன் வசிக்கிறேன்.
இந்த நிலையில், என் தங்கை இசைப்பிரியா என்ற ஷோபா போர்க்களத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கொண்டு போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் மூலம் தெரிந்துக் கொண்டோம்.
அந்த திரைப்படத்தில், என்னையும், என் தங்கை இசைப்பிரியாவையும் போராளிகள் என்று சித்தரித்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது போராளிகளை உலக நாடுகள் தீவிரவாதிகள் என்று அழைக்கின்றனர்.
இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட பலர் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் நாகரீகமாகவும், மரியாதையுடனும் வாழ உரிமை உள்ளது. அதே உரிமை எங்களுக்கும் உள்ளது. ஆனால், இந்த திரைப்படம் வெளியானால், எங்கள் குடும்பத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்திய நாட்டின் சட்டத்தின், கற்பழிக்கப்பட்ட பெண்ணின் எந்த ஒரு அடையாளத்தையும் ஊடகங்கள் மூலம் வெளியிடக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி 'போர்க்களத்தில் ஒரு பூ' படத்தின் இயக்குனர் கணேசன், தயாரிப்பாளர் குருநாத் செல்லசாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும், வழக்கு விசாரணையை பெப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ad

ad