புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2016

நளினியின் தந்தை மரணம் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நளினிக்கு பரோல் கருத்துகள் 0 வாசிக்கப்பட்டது 1 பிரதி




முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் நளினி அடைக்கப்பட்டு இருக்கிறார். நளினியின் தந்தை பாலகிருஷ்ணன் (வயது 81). அவர் சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

பணி ஓய்வுக்கு பிறகு, நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அம்பலவாணபுரத்தில் உள்ள தன்னுடைய மகன் ரகுராம் வீட்டில் வசித்து வந்தார். முதுமையின் காரணமாக நலிவுற்று இருந்த பாலகிருஷ்ணன் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மரணம் அடைந்தார்.

இவருக்கு நளினியுடன் சேர்த்து 2 மகள்களும், ரகுராம், ரவி ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மகன் ரவி சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருகிறார். இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணனின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சென்னையில் நடைபெறும் இறுதிச்சடங்கில் பங்கேற்க நளினிக்கு பரோல் வழங்கவேண்டும் என்று அவரது தாயார் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து நளினிக்கு இன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரோல் வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். 

ad

ad