முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி சென்னையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயணச்சீட்டு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. திருவான்மியூர் மாநகர பேருந்து நிலையத்தில், இன்று காலை முதல் மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. பாலவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மூத்த குடிமக்கள் வந்திருந்தனர்.
அவர்களில் சிலர், இந்த திட்டத்தை வரவேற்றும், பத்து டோக்கனும் மாத பாஸாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்கள்.