புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2016

வவுனியாவில் 11 வயது சிறுமி வன்புனர்வு தொடர்பில் இருவர் கைது


வவுனியா, தரணிக்குளம் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிசார் சிறுமியை வன்புனர்வு செய்தமை தொடர்பில் அப் பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த 16 ஆம் திகதி ஹரிஸ்ணவி என்ற மாணவி வன்புனர்வுக்குட்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கனகராயன்குளம், தரணிக்குளம் ஆகிய பகுதிகளில் இரு சிறுமிகள் இதுவரை வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad