இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிசார் சிறுமியை வன்புனர்வு செய்தமை தொடர்பில் அப் பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த 16 ஆம் திகதி ஹரிஸ்ணவி என்ற மாணவி வன்புனர்வுக்குட்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கனகராயன்குளம், தரணிக்குளம் ஆகிய பகுதிகளில் இரு சிறுமிகள் இதுவரை வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.