இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்களைக் கொண்ட ரி-20 தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று
ராஞ்சியில் நடைபெறவுள்ளது.முடிவடைந்த முதலாவது ரி-20 ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தமையால் தொடரில் தனது ஆதிக்கத்தைத்தக்க வைக்க வேண்டுமாயின் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாய நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்டம் இலங்கை, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.