மலேசிய விமான நிலையத்தில் நடிகை நயன்தாராவை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது தமிழ் சினிமா வட்டாரத்தில்
சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மலேசியாவில் படப்பிடிப்பு ஒன்றை முடித்து விட்டு நாடு திரும்புவதற்காக விமான நிலையம் வந்த நயன்தாராவை, போதைப் பொருள் பயன்படுத்தியிருந்ததாக சந்தேகித்த அதிகாரிகள் சிறிது நேரம் காக்க வைத்து சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதனை மறுத்துள்ள மற்றொரு தரப்பினர், வழக்கமான சோதனையின் போது, நடிகை நயன்தாராவின் பாஸ்போர்ட்டில் இமிக்ரேஷன் முத்திரை சரியாகப் பதியாததால் காக்கவைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.
இன்னும் சிலர், இவற்றில் எதுவுமே உண்மையில்லை என்றும், அவர் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்னை வந்து சேர்ந்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.