புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2016

சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமைக்கு மஹிந்த அதிருப்தி!

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை குறித்து சிங்கள பத்திரிகையொன்ற எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவை விடவும் நாடாளுமன்ற பதவியை வகிக்க தகுதியான பலர் இருக்கின்றார்கள்.
பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதனால் அதிகளவில் பாதிப்புக்களை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்நோக்க நேரிடும்.
சில வேளைகளில் சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியில் எவரேனும் கேள்வி எழுப்பினால் சட்ட சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.
இதேவேளை, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசிதவை பார்வையிட ஆளும் கட்சியின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைச்சாலைக்கு செல்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறித்த பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

ad

ad