புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2016

மஹிந்தவின் சோதிடர் சுமணதாசவும் காட்டிக்கொடுப்பாளராக மாறும் திட்டம்?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தனவும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான தகவல்களை அம்பலப்படுத்த முன்வந்துள்ளார்.
நேற்று முன்தினம் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுமணதாச தொலைபேசி ஊடாக ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல்கள் குறித்து சிற்சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பதினைந்து ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய மாளிகையொன்று இருப்பதாகவும், எனினும் அது அவரது பெரியப்பா மகள் நிரூபமாவின் கணவர் திருநடேசனின் பெயரில் இருப்பதாகவும் சுமணதாச தெரிவித்துள்ளார். 
அத்துடன் மஹிந்தவின் பிரதான மெய்ப்பாதுகாவலரான மேஜர் நெவில் ஹம்பாந்தோட்டையில் பாரிய மாளிகையொன்றைக் கட்டிக் கொண்டிருக்கும் தகவலையும் சுமணதாச வெளியிட்டுள்ளார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக வசீம் தாஜுதீன் கொலை மற்றும் லசந்த கொலைச்சம்பவம் போன்றவற்றில் சந்தேகிகப்படும் கெப்டன் திஸ்ஸ என்பவரும் ராஜகிரியவில் பாரிய மாளிகையொன்றை நிர்மாணித்திருப்பதாகவும்,
மேற்குறித்த அனைத்து மாளிகைகளுக்கும் அடிக்கல் நட சுபநேரம் குறித்துக் கொடுத்தது தானே என்றும் சுமணதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ராஜபக்ஷவினரின் இதுவரை வெளியாகா

ad

ad