புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2016

யாழில் ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

ஒருங்கிணைந்த நல்லிணக்க வழிமுறைகளுக்கான  www.scrm.gov.lkஇணையத்தளத்தை அதன் தலைவர் மனோரி முத்தடுக்காம, இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 

யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து இந்த இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.  உண்மை அறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள இடம்பெறாது தடுத்தல் ஆகிய 4 நோக்கங்களின் அடிப்படையில் ஜெனீவாவுக்கு சமர்ப்பிப்பதற்காக, பொறுப்புக் கூறல் அறிக்கை தயாரிப்பதற்கான பொறிமுறையாக பொதுமக்களின் கருத்துக்களை பதிவு செய்வதற்காக இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். 

ad

ad