நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு
இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனநாயகக் கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் வைத்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது