புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2016

வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் தனியார் பேருந்தை மோதியது! இரு கைகளையும் இழந்த பெண் காயம்! சாரதி தப்பியோட்டம்!

யாழ்.பிரதான வீதியில் பஸ்ரியன் சந்திப்பகுதியில் வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்த முற்பட்ட வேளை பின்னால் வந்த ‎உழவு இயந்திரம்‬ பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேரூந்தில் ஏற முற்பட்ட ‪‎இரு கைகளையும் இழந்த பெண்‬ணின் கால்கள் மேல்‬ உழவு இயந்திரம் ஏறியதில் ‪அவர் ஸ்தலத்திலேயே மயக்கமடைந்தார். உடனே சாரதியும் உழவு இயந்திரத்தை குறித்த இடத்தில் விட்டு விட்டு தப்பியோடினார்.

குறித்த இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                                

                                                

                                                

ad

ad