உயர்தர பரீட்சையில் இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்ற சில மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
உயர்தர பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்ற போதிலும், தாம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகவில்லை என தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும், தம்மிடமிருந்து 50 ரூபா அறவிடப்பட்டுள்ள போதிலும், தமக்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தம்மிடமிருந்து 50 ரூபா அறவிடப்பட்டுள்ள போதிலும், தமக்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.