புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2016

தமிழ்நாட்டில் மே 16ம் தேதி தேர்தல்: மே 19-ம் தேதி ரிசல்ட்



தமிழ்நாட்டில் மே 16ஆம் தேதி திங்கள்கிழமை 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. 

தமிழ்நாட்டில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு 5 நாளுக்கு முன்பு பூத் சிலிப் தரப்படும். படத்துடன் கூடிய பூத் சிலிப் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

5 மாநிலத்திலும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான எண்ணிக்கை மே 19ஆம் தேதி வியாழக்கிழமை எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். 

தமிழ்நாட்டில் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 29ஆம் தேதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2ஆம் தேதி இறுதி நாளாகும். 

ad

ad