புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2016

எகிப்திய எயார் லைன்ஸ் விமானம் கடத்தல்! 76 பயணிகள் விடுவிப்பு! கடத்தியவர் யார்? விபரம் தெரிந்தது!

எகிப்து நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானத்தை நடுவானில் மர்ம கும்பல் கடத்தியுள்ளதாகவும், அந்த விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பிணையக்கைதிகளாக
வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன
எகிப்து நாட்டை சேர்ந்த EgyptAir என்ற பயணிகள் விமானம் இன்று காலை அதே நாட்டில் உள்ள Alexandria என்ற நகரிலிருந்து எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் விமான குழுவினர் உள்பட 81 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், சற்று முன்னர் வெளியாகியுள்ள தகவலில் பயணிகள் விமானத்தை மர்ம கும்பல் ஒன்று கடத்தியுள்ளதாகவும், தற்போது ஐரோப்பாவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் தரையிறங்கியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைப்ரஸில் உள்ள Larnaca என்ற விமான நிலையத்தில் அந்த விமானம் உள்ளூர் நேரப்படி 8.46 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கியதும் அதில் ஒரு நபர் ஆயுதம் ஏந்தி உள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளை தற்போது வெளியேற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை எகிப்து நாட்டு வான்வெளி போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
மேலும், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதுடன், விமானத்தை கடத்தியவர்களும் வெடிகுண்டுகள் கட்டிய உடுப்புகளை அணிந்தவாறு விமானிகளை மிரட்டியுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
5 வெளிநாட்டவர். 7 சிப்பந்திகள் தவிர்த்து மற்ற 76 பேரும் விடுவிப்பு
எகிப்தில் இருந்து சைப்ரஸுக்கு கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள். 7 சிப்பந்திகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்எஸ்181 இன்று கெய்ரோவுக்கு கிளம்பியது. விமானத்தில் 81 பயணிகள். 7 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தை ஆயுதம் ஏந்திய ஒருவர் தான் கடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த நபர் தனது உடலில் கட்டியுள்ள குண்டுகளை வெடிக்கச் செய்துவிடுவதாகக் கூறி மிரட்டி வருகிறாராம். இந்நிலையில் எகிப்து அதிகாரிகள் தீவிரவாதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள். 7 சிப்பந்திகள் தவிர்த்து பிற பயணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள விமான நிலையத்தில் கடந்த 22ம் தேதி தற்கொலைப்படை தாக்குதல் நடந்த நிலையில் இன்று எகிப்து பயணிகள் விமானம் கடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விபத்துகளால் விமானத்தில் செல்ல மக்கள் அஞ்சும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகள் விமானத்தை கடத்தியவர் யார்? அவரின் கோரிக்கைகள் என்ன?: விபரம் தெரிந்தது
எகிப்தில் இருந்து சைப்ரஸுக்கு கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள், 7 சிப்பந்திகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விமானத்தை கடத்திய நபர் எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா என்பது தெரிய வந்துள்ளது. எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்எஸ்181 இன்று கெய்ரோவுக்கு கிளம்பியது. விமானத்தில் 81 பயணிகள்இ 7 சிப்பந்திகள் இருந்தனர்.
இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தை தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிய எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா(27) என்பவர் கடத்தியது தெரிய வந்துள்ளது.
எகிப்து அதிகாரிகள் சமஹாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையின் பலனாக விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள், 7 சிப்பந்திகள் தவிர்த்து பிற பயணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சமஹாவின் பிடியில் இருக்கும் 5 பயணிகளில் 3 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள், ஒருவர் இத்தாலியர், ஒருவர் அயர்லாந்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சமஹா அரபு மொழியில் 4 பக்கத்திற்கு சைப்ரஸில் வசிக்கும் தனது முன்னாள் மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துள்ளாராம்.
அந்த கடிதத்தை அவரிடம் அளிக்குமாறு அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளாராம். அவர் தனது மனைவியின் பெயரை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளாராம்.
மொழி பெயர்ப்பாளரை கேட்டுள்ள அவர் தனக்கு சைப்ரஸில் அரசியல் தஞ்சம் அளிக்குமாறும் கோரியுள்ளாராம். அதிகாரிகள் சமஹாவின் முன்னாள் மனைவியை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள பயணிகள், சிப்பந்திகளை மீட்க திட்டமிட்டுள்ளனர்.

ad

ad