புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2016

அமைச்சர் ஆதரவாளர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் அருகில் உள்ள மெய்வழிச்சாலை கிராமத்திற்குள் இன்று காலை 10 மணிக்கு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் சென்றனர்.

    கிராமத்திற்குள் சென்ற பறக்கும் படையினர் அமைச்சர் விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளரான சாலை மதுரம் என்பவரின் வீட்டிற்குள் சுமார் 3 மணி நேரம் சோதணை செய்த அதிகாரிகள் வெளியே வந்தனர்.
  
  வெளியே வந்த அதிகாரிகள் கூறும் போது,  இந்த வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து சோதணை நடத்தப்பட்டது என்றனர்.   இதே போல கடந்த இரு நாட்களாக திருவேங்கைவாசல் கிராமத்தில் உள்ள கல்குவாரி மற்றும் ரெடிமிக்ஸ் பிளான்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும் சோதணையில் பல கோடி பணம் சிக்கியதாகவும் தகவல்கள் கசிகிறது.

    இந்த சோதணை தகவல்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்புத்தியுள்ளது.

ad

ad