புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2016



விஜயகாந்த் முடிவை முழுமையாக வரவேற்கிறேன்: வைகோ கருத்து 

சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தேமுதிக தனித்து தேர்தலை சந்திக்கும் என்றார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 

பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, திமுக என்றால் தில்லு முல்லு, அதிமுக என்றால் அனைத்திலும் தில்லு, முல்லு. இரண்டு கட்சிகளையும் ஆட்சிக்கு வரவிடாமல் விரட்ட வேண்டும் என்று கூறிவிட்டார். அதனை வழிமொழிகிற விதத்தில்தான் விஜயகாந்த் பேச்சு இருக்கிறது. நான் இதனை முழுமையாக வரவேற்கிறேன். காரணம் என்னவென்றால் 59 சீட்டுகளுக்கும், 55 சீட்டுகளுக்கும் திமுகவோடு சேர்ந்துவிட்டார் என்று செய்தி பரவியது. அந்த செய்தி உடைந்து  தவுடு பொடியாகிவிட்டது. பேரம் பேசவில்லை என்பதை விஜயகாந்த் தெளிவுப்படுத்தி விட்டார். அவர் எடுத்த முடிவை வரவேற்கிறேன். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை நான் யூகங்களாக நான் சொல்லவிரும்பவில்லை என்றார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த தே.மு.தி.க. மகளிரணி மாநாட்டில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்து பேச்சை நிறைவு செய்தார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா, கேப்டன் அறிவிப்பால் கடந்த 3 மாதமாக இருந்த அலை முடிவுக்கு வந்துள்ளது. நாளை முதல் தமிழக அரசியல் விறுவிறுப்படையும். அந்தந்த கட்சிகள் அறிவிப்பை வெளியிடுவார்கள். 

தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுத்தவர்களுக்கு என்னுடைய உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளார். 7 பேர் குழுவினர் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். தே.மு.தி.க. கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகள் எங்களது 7 பேர் குழுவினருடன் பேசலாம் என்றாசென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த தே.மு.தி.க. மகளிரணி மாநாட்டில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்து பேச்சை நிறைவு செய்தார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா, கேப்டன் அறிவிப்பால் கடந்த 3 மாதமாக இருந்த அலை முடிவுக்கு வந்துள்ளது. நாளை முதல் தமிழக அரசியல் விறுவிறுப்படையும். அந்தந்த கட்சிகள் அறிவிப்பை வெளியிடுவார்கள். 

தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுத்தவர்களுக்கு என்னுடைய உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளார். 7 பேர் குழுவினர் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். தே.மு.தி.க. கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகள் எங்களது 7 பேர் குழுவினருடன் பேசலாம் என்றா

ad

ad