புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2016

உதைப்பந்தாட்ட அணியினருக்கு சீருடை வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கிளின் 2015ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டின் கீழ் திருமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் கோல்டன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் உதைப்பந்தாட்ட அணியினருக்கு ரூபா. 30,000.00 பெறுமதியான உதைப்பந்தாட்ட சீருடை வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த 23ஆம் திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கள்  கோல்டன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் உதைப்பந்தாட்ட அணியினரிடம் கையளித்தார். இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேசத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை தலைவர் நதீர்கான், செயலாளர் ரஹ்மதுல்லா, மாகாண சபை உறுப்பினரின் இணைப்பு செயலாளார் ஆசிரியர் ஐயூப்கன் மற்றும் ஈச்சநகர் கிராமிய அபிவிருத்தி சங்க தலைவர் நஹீம் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர்,

திருகோணமலை மாவட்டத்தில் இருக்கின்ற பல விளையாட்டுக்கழகங்களுக்கு என்னாலான உதவிகளையும், நிதி ஒதிக்கீடுகளையும் மேற்கொண்டு வருகின்றேன். இளைஞர்களாகிய நீங்கள்தான் எம்நாட்டின் முதுகெழும்புகள் விளையாட்டுத்துறையில் தாங்கள் ஆற்றப்பட வேண்டிய துறைகள் நிறையவே காணப்படுகின்றன. 

அந்த வகையில் இந்த உதைப்பந்தாட்ட விளையாட்டுக்கழகத்திற்கு தன்னாலான நிதி ஒதிக்கீடு ஒன்றினை மேற்கொண்டு இன்று இச்சீருடையினை பெற்றுக்கொடுத்துள்ளேன். எதிர்காலத்திலும் தன்னலான உதவிகளை எம்பிரதேசத்திலுள்ள விளையாட்டுக்கழகங்கள் அனைத்திற்கும் பெற்றுக்கொடுக்க தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

                            

                            

                            

ad

ad