அப்போது அவர் கூறியதாவது, சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டி என்பதில் எனக்கு கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. தேர்தலை கருத்தில் கொண்டு தே.மு.தி.க. தனியாக போட்டியிடுவது என்பது அவர்களது கட்சியின் நிலைப்பாடு. இது பற்றி முடிவு எடுப்பதற்கு அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட, ஆட்சி செய்து கொண்டு இருக்கிற 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். திராவிடம் இல்லாத ஒரு ஆட்சி அமைய வேண்டும். திராவிடம் இல்லாத அனைத்து கட்சிகளும் ஒரு அணியில் சேர வேண்டும் என்பது எனது கருத்து
கேள்வி: தே.மு.தி.க. கூட்டணிக்கு பா.ஜ.க. செல்லுமா?
பதில்: அது பற்றி எதுவும் சொல்லமுடியாது.
கேள்வி: அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதா?
பதில்: தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. இவ்வாறு கூறினார்.