புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2016

கள்ளக்காதலை கண்டித்ததால் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது அம்பலம் மனைவி, கள்ளக்காதலன் பிடிபட்டனர்

போலி மது குடித்து நண்பருடன் விவசாயி இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது கள்ளக்காதலை
கண்டித்ததால் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக விவசாயியின் மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
மது குடித்த விவசாயி நண்பருடன் சாவு
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பஞ்சேனஹள்ளி அருகே உள்ள பெட்டத தேவரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் எஸ்.சுரேஷ் (38). இருவரும் நண்பர்கள் ஆவர். சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த மாதம் 20–ந்தேதி தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை முன்னிட்டு அந்தப் பகுதியில் சில வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர, மது பாக்கெட்டுகளை வீடுகளில் வீசினர். அதேப் போல் கடந்த மாதம் 18–ந்தேதி சுரேசின் வீட்டில் மது பாக்கெட்டுகளை சிலர் வீசியுள்ளனர்.
அந்த மது பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்ட சுரேஷ், தனது நண்பர் எஸ்.சுரேசுடன் சேர்ந்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்று குடித்துள்ளார். மது குடித்த சிறிது நேரத்தில் 2 பேரும் ரத்த வாந்தி எடுத்து உயிருக்கு போராடினர். அவர்களை அவர்களது குடும்பத்தினர் மீட்டு கடூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைதொடர்ந்து தேர்தலை ஒட்டி மர்மநபர்கள் வழங்கிய போலி மதுவை குடித்ததால் 2 பேரும் இறந்ததாக பஞ்சேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே இறந்துபோன 2 பேரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில் 2 பேரும் குடித்த மதுவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.
திடீர் திருப்பம்
இதைதொடர்ந்து 2 பேரும் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்தார்களா? அல்லது மர்மநபர்கள் யாராவது மதுவில் விஷம் கலந்துகொடுத்து 2 பேரையும் கொலை செய்தார்களா? என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதுபற்றி விசாரிக்க கடூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மதுசூதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, இறந்துபோன 2 பேரும் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் விவசாயியான சுரேசின் மனைவி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டியதும் தெரியவந்தது.
இதைதொடர்ந்து சுரேசின் மனைவி, அவரது கள்ளக்காதலன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்காதலை கண்டித்ததால்...
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–
கொலையான விவசாயி சுரேசின் மனைவி பெயர் சுஜாதா (வயது 32). ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா யாதகே கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கமூர்த்தி (52). தேங்காய் வியாபாரியான இவர் பெட்டத தேவரஹள்ளி பகுதிக்கு சென்று தேங்காய்களை விற்பனை செய்து வந்துள்ளார். அப்போது சுஜாதாவுக்கும், சிவலிங்கமூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்கள் இடையே கள்ளக்காதலமாக மாறியுள்ளது. இதனால் கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் பற்றி சுரேசுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் தனது மனைவி சுஜாதாவை கண்டித்துள்ளார். இருப்பினும் சுஜாதா தனது கள்ளக்காதலை கைவிடவில்லை. இதை அறிந்த சுரேஷ், மனைவி சுஜாதாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதுபற்றி சுஜாதா தனது கள்ளக்காதலன் சிவலிங்கமூர்த்தியிடம் கூறியுள்ளார். இதையடுத்து 2 பேரும், சுரேஷ் உயிருடன் இருந்தால் கள்ளக்காதலை தொடர முடியாது என எண்ணினர். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
விஷம் கலந்துகொடுத்து கொலை
அதாவது அந்த சமயத்தில் மாவட்ட– தாலுகா பஞ்சாயத்து தேர்தலையொட்டி வேட்பாளர்கள், வீடுகள் தோறும் மது பாக்கெட்டுகளை வீசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை அறிந்த சிவலிங்கமூர்த்தியும், சுஜாதாவும் அந்த மது பாக்கெட்டில் ஊசி மூலம் விஷம் செலுத்தி, விஷம் கலந்த மதுவை சுரேசை குடிக்க வைத்து கொலை திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கடந்த மாதம் 18–ந்தேதி சுரேசின் வீட்டில் வீசப்பட்ட மது பாக்கெட்டில் ஊசி மூலம் விஷத்தை கலந்துள்ளனர். இதை அறியாத சுரேஷ், தனது நண்பரான எஸ்.சுரேசுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை குடித்துள்ளார். இதனால் அவர்கள் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் கொலை வழக்குப்பதிவு செய்து சுஜாதாவையும், அவரது கள்ளக்காதலன் சிவலிங்கமூர்த்தியையும் கைது செய்து விசாரித்தோம். அப்போது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ad

ad