மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி:– தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் சுதீஷ், தே.மு.தி.க.–மக்கள் நல கூட்டணி வெற்றி பெற்றதும், முதல்–அமைச்சராக விஜயகாந்த், துணை முதல்–அமைச்சராக வைகோ, நிதித்துறை அமைச்சராக ஜி.ராமகிருஷ்ணன் இருப்பார்கள் என்று பேசி இருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:– மக்கள் நல கூட்டணி–தே.மு.தி.க. உடன்பாடு ஏற்பட்ட பிறகு, அந்த அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்ற நம்பிக்கையை அந்த வடிவத்தில் அவர் தெரிவித்து இருக்கிறார். அவருடைய விருப்பத்தை தான் கூறியுள்ளார். தேர்தல் முடிந்த பிறகு தான் அதை முடிவு செய்வோம்.
கேள்வி:– தே.மு.தி.க.–மக்கள் நல கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வருவதற்கான வாய்ப்பு உள்ளதா?
பதில்:– தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தே.மு.தி.க.–மக்கள்நல கூட்டணியுடன் உடன்பாடு வைத்து கொள்ள வேண்டும் என்று விடுக்கப்பட்ட அழைப்பு அப்படியே தான் இருக்கிறது. இவ்வாறு பதிலளித்தார்.