புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2016

வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம், பாதுகாப்பு அதிகரிப்பு! (வீடியோ இணைப்பு)


அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதை அடுத்து பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியின் அலுவகலகமான வெள்ளை மாளிகை தலைநகர் வாசிங்டனில் அமைந்துள்ளது.
இந்த வெள்ளை மாளிகை வளாகத்தினுள் அமைந்துள்ள பார்வையாளர் மையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட்தாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த மர்ம நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் உயிரிக்கு ஆபத்தான நிலையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து பிடிபட்ட நபரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது பொதுமக்கள் பீதி அடையத்தக்க சம்பவம் இல்லை எனவும் இதனால் பொதுமக்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை எனவும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியின் சில மீற்றர்கள் தொலைவில்தான் ஜனாதிபதி ஒபாமா ஈஸ்டர் விழா சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்துக்கொண்டிருந்தார்.
மேலும் அந்த விழா நடைபெற்ற பகுதியில் சுமார் 35,000 பொதுமக்கள் குழுமியிருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad