புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2016

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வவுனியா இளைஞன் தடுத்து வைப்பு


வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தேவராஜா சின்ன கனோஜி என்ற 27 வயதான இளைஞரே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியா செல்வதற்காக குவைத் நாட்டிற்கு சென்றிருந்த வேளை  இன்று காலை அங்கிருந்து மீண்டும் இலங்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவிற்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிலேயே இவர் இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

ad

ad