புதிய அரசியல் யாப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திடம் யோசனை ஒன்றை சமர்ப்பிப்பது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ள கூட்டத்தில் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இலங்கைகத் தமிழரசுக் கட்சி அல்லாத ஏனைய கட்சி உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கிய கடும் அழுத்தங்களினால் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் இந்த கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டார்கள் என்றும் ஆனாலும் கூட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.