புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2016

நாமலுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க மஹிந்த திட்டம்! சூழ்ச்சிக்குள் மைத்திரி


ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ விரைவில் ஆயுள் முழுவதும் சிறை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக, அவரின் குடும்பத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பல்வேறு மோசடிகள் மற்றும் கொலை வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாமல் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் முடித்து வைக்க மஹிந்த தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர்.
விரைவில் நாமல் ராஜபக்ஷ அழகான மருத்துவ இளவரசியின் துணைவராகவே சிறைச்சாலைக்கு செல்லவுள்ளார் என சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நாமலின் இதய துடிப்பை குறித்த பெண் மருத்துவர் நன்கு அறிந்துள்ளதாக மஹிந்த குடும்பத்தினர் நம்புகின்றனர். இதனையடுத்து காலம் தாழ்த்தாது திருமணத்தை முடித்து வைக்க தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
இவ்வாறான சம்பவத்தின் ஊடாக ஜனாதிபதி மைத்திரியை நெருக்குவதுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளவும் மஹிந்த குடும்பம் திட்டமிட்டுள்ளது.
நாமலின் திருமண நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்து, சாட்சிக் கையெழுத்தினை போட்டுக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஜனாதிபதியின் அனுதாபத்தை பெற்றுக் கொள்வதன்மூலம் சிறை செல்வதை தவிர்த்துக் கொள்ள எண்ணியுள்ளதாக தெரிய வருகிறது.
எதிர்வரும் வாரங்களில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படலாம் என நம்பப்படும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

ad

ad