புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2016

புதிய திருப்பம் : விஜயகாந்த் அணியில் மக்கள்நல கூட்டணி?

M IST
சென்னை

தமிழக சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 16 ந்தேதி நடைபெறுகிறது இதனால்அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காத நிலையில், பிரதான எதிர் கட்சியான தி.மு.க. கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேசி வருகிறது. காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. எனவே, தே.மு.தி.க.வையும் தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொண்டு, வலுவாக தேர்தல் களத்தில் நிற்க தி.மு.க. முயற்சி மேற்கொண்டு வந்தது.

இது ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் பா.ஜ.க. தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தே.மு.தி.க.வை இழுக்கவும் முயற்சி நடந்து வந்தது.  அதை உறுதி செய்யும் வகையில், கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி, மத்திய மந்திரியும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.

முதல் சந்திப்பிலேயே ‘கிரீன் சிக்னல்’ கிடைத்துவிடும் என்று நம்பிவந்த பிரகாஷ் ஜவடேகருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. பிடி கொடுக்காமல் பேசிய விஜயகாந்த் பல நிபந்தனைகளையும் விதித்ததால், தங்கள் கருத்துக்களை கட்சி மேலிடத்தில் சென்று தெரிவிப்பதாக கூறி பிரகாஷ் ஜவடேகர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் அதை விஜயகாந்த் தரப்பு ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக 150; காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியானது.

இதற்கிடையில் இரண்டாவது முறையாக  பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்தார். ஆனால் அவரை விஜயகாந்த்ச் சந்திக்கவில்லை அவர் ரிஷிவந்தியம் செல்கிறார் என கூறபட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் - பிரகாஷ் ஜவடேகர் ரகசியமாக சந்தித்து பேசி உள்ளனர்.

மீனம்பாக்கம் அருகே தேமுதிக பிரமுகர் இல்லத்தில் விஜயகாந்தை ஜவடேகர் ரகசியமாக சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயகாந்த் பா.ஜ.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரவேண்டும் என்றால், வலுவான கூட்டணியை முதலில் உருவாக்குங்கள். கடந்த பாராளுமன்ற தேர்தல் போன்று, பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளை மீண்டும் கூட்டணிக்கு அழைத்து வாருங்கள். மேலும், தேர்தல் செலவையும் ஏற்றுக்கொள்வதுடன், மைத்துனர் எல்.கே.சுதீசுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் தரவேண்டும்’’ என்றும் நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டது.

ஆனால் திருக்கோவிலூரில் நடந்த விழாவில் பேசிய விஜயகாந்த்,

பணத்திற்கும், பொருளுக்கும் ஆசைப்படுபவன் விஜயகாந்த் அல்ல. நான் பார்க்காத புகழ் அல்ல. பணம் அல்ல. நான் இதுவரைக்கும் தனியாகத்தான் இருக்கிறேன். கூட்டணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் தெளிவாக, தைரியமாக இருக்கிறேன். யாருடனும் கூட்டணிக்காக பேரம் பேசவில்லை. காசையும் வாங்க வில்லை.

தேர்தல் தேதி அறிவித்ததும் என் தொண்டர்களையும், பத்திரிகை நண்பர்களையும் அழைத்துத்தான் கூட்டணி பற்றி சொல்வேன். எதைச்சொன்னாலும் உங்களை அழைத்து, உங்கள் முன்னால்தான் சொல்வேன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் முன்னால் சொல்கிறேன் என கூறினார்.

இருந்தாலும் தொடர்ந்து  விஜயகாந்த் பாரதீய ஜனதாவுடனும் , தி.மு.கவுடனும் பேச்சு நடத்தி வருவதாக கூறபட்டு வந்தது..

இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த தே.மு.தி.க. மகளிர் மாநாட் டில் விஜயகாந்த் பேசும் போது, ‘‘தே.மு.தி.க. தனித்து போட்டியிடும்’’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் தி.மு.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி சேர மாட்டார் என்பது அதிகாரப் பூர்வமாக உறுதியாகி விட் டது. விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கி 2006-ல் முதன் முதலில் தேர்தல் களத்தில் காலடி எடுத்து வைத்த போது 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி னார். தே.மு.தி.க. வேட்பாளர் கள் பெற்ற வாக்குகள் விஜயகாந்த் இமேஜை உயர்த்தியது.
எனவே அந்த அடிப்படை யில் மீண்டும் அவர் தனித்து போட்டியிடும் முடிவுக்கு வந்துள்ளார்.

இதற்கிடையே தே.மு.தி.க. தலைமையிலான கூட்டணிக்கு மற்ற கட்சிகள் வரலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்தார். இதன்மூலம் தே.மு.தி.க. சில கட்சிகளை சேர்த்துக் கொள்ள தயாராகி வருவது தெரிய வந்துள் ளது. தற்போதைய சூழ்நிலையில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து கொள்ள பா.ஜ.க. அல்லது மக்கள் நல கூட்டணி ஆகிய இரு தரப்பினருக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.

அமித்ஷா, பா.ஜ.க. தலைவராக தேர்வானதும் சுதீஷ் நேரில் சென்று சந்தித்து பேசியதில் தொடங்கி பிரகாஷ் ஜவடேகர் 2 தடவை சென்னை வந்து பேசியது வரை தே.மு.தி.க.-பா.ஜ.க. தலைவர்களிடம் நல்ல புரிதல் இருந்தது. குறிப்பாக பிரேமலதா பா.ஜ.க. கூட்டணியை மிகவும் விரும்பினார். தே.மு.தி.க.வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிரேமலதா தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

ஆனால் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது உள்பட சில நிபந்தனைகளை பா.ஜ.க. மேலிட தலைவர்கள் ஏற்க தயங்கினார்கள். இதனால் பா.ஜ.க.-தே.மு.தி.க. பேச்சுவார்த்தை நிறைவு பெறவில்லை. மாறாக இருதரப்புக்கும் இடையே உரசல் ஏற்பட்டுவிட்டது.

தே.மு.தி.க.விடம் இருந்து பா.ஜ.க. சற்று விலகி நிற்கும் தற்போதைய சூழ்நிலையில் அடுத்து தே.மு.தி.க.வுடன் சேரும் பிரகாசமான வாய்ப்பு மக்கள் நல கூட்டணிக்கு மட்டுமே உள்ளது. மக்கள் நல கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ராமகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் விஜயகாந்திடம் நல்ல நட்புடன் உள்ளனர். விஜயகாந்திடம் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

விஜயகாந்த் தலைமையி லான கூட்டணியில் சேர அவர்கள் 4 பேரும் தயாராக உள்ளனர். கூட்டணிக்கு விஜயகாந்த் தலைவராக இருக்கட்டும் என்று அவர் கள் 4 பேரும் விட்டுக் கொடுத்துள்ளனர். அது மட்டுமின்றி விஜயகாந்த்தை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து பிரசாரம் செய்ய வும் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் விஜயகாந்த் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் ஒருமித்த கருத்துடன் ஏற்க தயாராக உள்ளனர். அவர்கள் தே.மு.தி.க.வுக்கு ஒரே ஒரு நிபந்தனையை மட்டுமே கூறியுள்ளனர். எக்காரணம் கொண்டும் கூட்டணியில் பா.ஜ.க.வை சேர்க்கக் கூடாது என்பதுதான் அது.

இதையடுத்து தே.மு.தி.க. கூட்டணியில் மக்கள் நல கூட்டணியை சேர்ப்பதா அல்லது பா.ஜ.க.வை சேர்ப்பதா என்று விஜய காந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தே.மு.தி.க.வுடன் மக்கள் நல கூட்டணி சேர பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளுக்கும் மொத்தம் சுமார் 8 சதவீத வாக்குகள் உள்ளது. தே.மு.தி.க.வுக்கு சுமார் 10 சதவீத வாக்குகள் உள்ளது. தே.மு.தி.க.வும் மக்கள் நல கூட்டணியும் ஓரணியில் வரும் பட்சத்தில் சுமார் 15 முதல் 18 சதவீத வாக்குகளை பிரித்து விடும் ஆற்றல் அந்த கூட்டணிக்கு வந்து விடும்.

ஆனால் பா.ஜ.க.வுக்கு 3 சதவீத வாக்குகளே உள்ளது. தே.மு.தி.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்தால் அந்த அணியால் சுமார் 9 முதல் 12 சதவீத வாக்குகளையே பெற முடியும். எனவே வாக்கு சதவீத அடிப்படையில் பார்த்தாலும் தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணிக்கே அதிக பலம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

ad

ad