புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2016

அம்­பாறையில் சூடு பிடிக்கும் சட்­டத்­த­ர­ணி நிதர்­ஷினி மரண விவகாரம்! கணவர் கைது


அம்­பாறை ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் மீட்­கப்­பட்ட பெண்­ சட்­டத்­த­ர­ணியின் கண­வரை எதிர்­வரும் 6ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதவான் நீதி­மன்ற நீதி­ப­தியும், மேல­திக நீதவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யு­மான திரு­மதி நளினி கந்­த­சாமி உத்­த­ர­விட்டார்.
புதன்­கி­ழமை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போதே மேற்­படி தீர்ப்பை வழங்­கினார்.
பெண் சட்­டத்­த­ரணி சட­ல­மாக மீட்­கப்­ப­டு­வ­தற்கு சில மணித்­தி­யா­ல­ங்­க­ளுக்கு முன் சட்­டத்­த­ர­ணியும் அவ­ரது கண­வரும் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­ட­தா­கவும் சட்­டத்­த­ர­ணியை அவ­ரது கணவர் கையால் அடித்­த­தா­கவும் பொலி­ஸாரின் ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணையில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.
இத­னை­ய­டுத்து கையால் அடித்த குற்­றத்­துக்­காக சட்­டத்­த­ர­ணியின் கண­வரை பொலிஸார் சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்து நீதி­பதி முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதி­பதி உத்­த­ர­விட்டார்.
இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது
அக்­க­ரைப்­பற்று -7ஆம்­பி­ரிவு கலா­சார மண்­டப வீதி­யைச்­ சேர்ந்த உயிரிழந்த பெண்­சட்­டத்­த­ரணி லோகராஜா நிதர்­ஷினி (28வயது) அக்­க­ரைப்­பற்று நீதி­மன்­றத்தில் கட­மை­யாற்றி வந்தார்.
கடந்த திங்­கட்­கி­ழமை மாலை கணவன் மனைவி இரு­வ­ருக்கும் இடையில் சண்டை ஏற்­பட்­டுள்­ளது.
அதன்பின் அன்­றி­ரவு 7.00 மணி­ய­ளவில் மனை­வி­யான பெண் சட்­டத்­த­ரணி வீட்டின் அறை­யொன்­றி­லி­ருந்து தூக்கில் தொங்கி உயி­ரி­ழந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.
இச்­சம்­பவம் தொடர்­பாக அக்­க­ரைப்­பற்று பொலி­ஸா­ருக்கு தெரி­ய­வந்­த­தை­ய­டுத்து, பொலிஸார் சம்­பவ இடத்­துக்கு சென்று விசா­ர­ணையை மேற்­கொண்­டனர்.
நீதி­பதி திரு­மதி நளினி கந்­த­சாமி சட­லத்தை பார்­வை­யிட்டு பிரேத பரி­சே­ாத­னையின் பின் சட­லத்தை உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.
இத­னை­ய­டுத்து சடலம் புதன்­கிழமை தந்­தை­யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

ad

ad