புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2016

சித்திரையில் மைத்திரி யாழில்! மேலும் சில காணிகள் விடுதலை?


யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் சில பகுதிகள் சித்திரை புதுவருடத்திற்கு முன்னர் யாழ்.வருகை தரும் ஐனாதிபதியினால் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்களுடைய நிலங்கள் பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2015 டிசம்பர் மாதம் யாழ்.வந்த ஐனாதிபதி 6 மாதங்களுக்குள் மக்களுடைய நிலங்கள் மக்களிடமே வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், 2015 இறுதி பகுதியில் 701.5 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேலதிகமாக எந்தவொரு நிலமும் விடுவிக்கப்படாத நிலையில் காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரி மற்றும், அதனை அண்டிய பகுதிகள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இதேவேளை காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டி ஆகிய 3 பகுதிகளில் 280 ஏக்கர் நிலம் சித்திரை புதுவருடத்திற்கு முன்னதாக யாழ். வருகைதரும் ஐனாதிபதியினால் விடுவிக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இந்தப் பகுதிகளில் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்டப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

ad

ad