புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2016

மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கும் வீரலட்சுமி

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை,  தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
 
மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை,  மதிமுக தலைமை அலுவலகமான தாயத்தில் இன்று தமிழ
ர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, பொதுச்செயலாளர் நா.கணேசன், தலைமை நிலையச் செயலாளர் முனியன், காஞ்சி மாவட்டச் செயலாளர் இர.ரஞ்சித், நெல்லை செல்வம், மகேந்திரன் உள்ளிட்டவர்கள் சந்தித்துப் பேசினர்.

அப்போது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும், அதன் வெற்றிக்காக இணைந்து பணியாற்றுவதாகவும் வைகோவிடம் உறுதி அளித்தனர். இதற்கு தமிழர் முன்னேற்றப்படை நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும், நன்றியினையும் வைகோ தெரிவித்தார்.

நிகழ்ச்சியின்போது, சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன், அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த தகவல் மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ad

ad