மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை, மதிமுக தலைமை அலுவலகமான தாயத்தில் இன்று தமிழ
ர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, பொதுச்செயலாளர் நா.கணேசன், தலைமை நிலையச் செயலாளர் முனியன், காஞ்சி மாவட்டச் செயலாளர் இர.ரஞ்சித், நெல்லை செல்வம், மகேந்திரன் உள்ளிட்டவர்கள் சந்தித்துப் பேசினர்.அப்போது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும், அதன் வெற்றிக்காக இணைந்து பணியாற்றுவதாகவும் வைகோவிடம் உறுதி அளித்தனர். இதற்கு தமிழர் முன்னேற்றப்படை நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும், நன்றியினையும் வைகோ தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்போது, சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன், அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த தகவல் மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.