புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2016

சில மணி நேரத்தில் திமுகவுக்கு பதிலடி கொடுத்த விஜயகாந்த்!

தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த யுவராஜ், திமுகவில் சேர்ந்த சில மணி நேரத்தில் புதிய மாவட்ட செயலாளரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நியமித்து திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த யுவராஜ், இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில்
தி.மு.க.வில் இணைந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ், விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக எடுத்த முடிவு தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிமுக ஆட்சியை வீழ்த்த சரியான கூட்டணி அமைக்காத விஜயகாந்த்தின் பின்னால் இனியும் செல்ல நாங்கள் தயாராக இல்லை. அதனால் தி.மு.க.வுக்கு வந்து விட்டேன்" என்று கூறியிருந்தார்.

திமுகவில் யுவராஜ் இணைந்த சில மணி நேரத்தில் வடசென்னை மாவட்டத்துக்கு புதிய பொறுப்பாளரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக நியமித்து திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "'தேசிய முற்போக்கு திராவிட கழதக்தின் வடசென்னை மாவட்ட கழக செயலாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ., கழக இளைஞர் அணி துணை செயலாளர் மு.தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ப.மதிவாணன் ஆகியோர் இன்று (30.3.16) முதல் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இவர்களுக்கு மாவட்டம், பகுதி, வட்டம், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாபெரும் வளர்ச்சியடைய, சிறப்புடன் செயல்பட அனைவரும் பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்

ad

ad