புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2016

இம்முறை 20,000 இற்கும் அதிக மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ள நடவடிக்கை

இம்முறை 27,603 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 25,200 மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
15 பல்கலைக்கழகங்களுக்கும் 18 உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இந்த மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இம்முறை பல்கலைக்கழக கற்கைநெறியை தொடர்வதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கையேட்டை எதிர்வரும் 24 ஆம் திகதி மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது

ad

ad