புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2016

பனாமா பேப்பர்ஸில் 46 இலங்கையரின் ஊழல் விபரங்கள்: 13 முஸ்லிம்கள், 05 தமிழர்கள் உள்ளடக்கம்

உலகையே உலுக்கி வரும் பனாமா பேப்பர்ஸ் மூலம் செல்வந்தப் புள்ளிகளின் இரகசிய பணம் பதுக்கல் விடயம் வெளிவந்து சர்வதேச மட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இருந்தும் 46 பேர் இந்த பணப் பதுக்கல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளமை குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
இவர்களில் இலங்கையின் பெரும் வர்த்தகர்களான போரா சமூக முஸ்லிம்கள் 13 பேர் மற்றும் ஐந்து தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சிங்களவர்கள் 25 பேரில் லக்பிம பத்திரிகை மற்றும் சுமதி குரூப் நிறுவனங்களின் தலைவரும், அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவருமான ஜகத் சுமதிபாலவும் உள்ளடங்கியுள்ளார்.
அத்துடன் உரிமையாளர்களின் பெயர் வெளியிடப்படாத மூன்று நிறுவனங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ad

ad