புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2016

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அரசவைத் தலைவராக நாகலிங்கம் பாலசந்திரன்

8654550a-3cf9-4c5f-80ea-99a00ccc6006
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அரசவைத் தலைவராக நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசவைச் செயலர் அறிவித்துள்ளார்.ccf92539-80f7-4fd1-8279-dbcb015e84eb
கடந்த வாரம் இடம்பெற்றிருந்த, தொழில்நுட்ட வழிமுறையிலான அரசவைக் கூட்டத்தில், அரசவைப் பிரதிநிதிகளின் வாக்களிப்பின் மூலம் இத்தேர்வு இடம்பெற்றுள்ளது.
பிரான்சினை வாழ்விடமாக கொண்ட நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதற்தவணைக் கொண்டு, அரசவைப் பிரதிநிதியாக இருந்து வருகின்றார்.
நாடுகடந் தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சராக இருந்துள்ளதோடு, சிறிலங்கா புறக்கணிப்பு செயல்முனைப்பின் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார்.
பிரான்சின் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளதோடு, சுனாமி இடம்பெற்றிருந்த காலப்பகுதியில் தமிழர் தாயகத்துக்கு பிரென்சு அரசியல் பிரமுகர்களை அழைத்துச் சென்று களப்பணியும் ஆற்றியுள்ளார். பிரென்சு சோசிலச கட்சியின் உறுப்பினராக இருப்பதோடு, பல்வேறு சமூக அரசியற் பணிகளிலும் முன்னின்று செயலாற்றுபவர்.

ad

ad