புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2016

விடுதலைப் புலிகளின் பாடலைக் கேட்டவருக்கு யாழில் நடந்த கொடுமை!!

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் பாடல்களை செவிமடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட
சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று(வியாழக்கிழமை) சிவில் உடையில் சென்ற பொலிஸாரினாலேயே 25 வதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று மாலை யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை கடந்த தேர்தல்களின் போது அங்கஜன் இராமநாதன், மற்றும் அரச ஆதரவான கட்சிகள் விடுதலைப் புலிகளின் பாடல்களை பகிரங்கமாக ஒலிபரப்பி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

ad

ad