புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2016

பிரபல தொலைக்காட்சி நடிகை தூக்கிட்டு தற்கொலை: காதல் தோல்வி காரணமா?

மும்பையில் வசித்து வந்த டி.வி. நடிகை பிரதியுஷா காதல் தோல்வி காரணமாகத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

காந்திவிலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரதியுஷா (24), இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர்.
இந்நிலையில் இவர் காதல் தோல்வி காரணமாகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கோகிலா பென் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த காந்திவிலி பொலிசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதியுஷாவின் உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக போரிவிலியில் உள்ள பகவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

ad

ad